News September 8, 2025
ஒகேனக்கல்: பரிசல் ஓட்டிகள் திடீர் வேலைநிறுத்தம்

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில், பரிசல் சவாரிக்குச் செப். 7-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பரிசல் ஓட்டிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறந்த பரிசல் ஓட்டிகளின் வாரிசுகளுக்கு உரிமம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதனால், பரிசல் சவாரி செய்ய முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Similar News
News September 8, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.08) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக குணவர்மன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்புஎண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News September 8, 2025
மக்கள் குறைதீர் கூட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (08.09.2025) பெற்றுகொண்டார். உடன் மாவட்ட வன அலுவலர் இராஜங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News September 8, 2025
முதல்வர் கோப்பை போட்டிகள் துவக்கம்

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை அன்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளை தருமபுரி எம்எல்ஏ எஸ்பி. வெங்கடேஸ்வரன் துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.