News April 14, 2025

ஒகேனக்கல் அருகே சிறுமிகள் நீரில் மூழ்கி இறப்பு

image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூருவை சேர்ந்தவர்கள் விடுமுறைக்கு ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, பாக்கிய லட்சுமி மற்றும் காவியா இருவரும் ஆழமான பகுதிக்குள் சென்றதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது . தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுமிகளின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News February 13, 2026

தருமபுரியில் கோயில் தான் டார்கெட்; அடுத்தடுத்து பயங்கரம்!

image

காரிமங்கலம் அருகே பொம்மஅள்ளியில் மகாசக்தி மாரியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் கோயில் மற்றும் ஓம் சக்தி மாரியம்மன் கோயில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அம்மன் தங்க நகை, குத்துவிளக்கு உட்பட பூஜை பொருட்கள் மற்றும் காணிக்கை பணம் 1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டுள்ளது. இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 13, 2026

தருமபுரியில் இரவு முழுவதும் துடிதுடித்து பலி!

image

புதூரை சேர்ந்த காய்கறி வியாபாரி வெங்கடேஷ் குமார் (31). இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்து விட்டு பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் தடுப்பு சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டார். இரவு முழுவதும் துடித்த இவரை நேற்று காலை பொதுமக்கள் பார்த்து ஏ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

News February 13, 2026

தருமபுரியில் கொடூரத்தின் உச்சம்!

image

பாலக்கோடையை சேர்ந்த பெண்ணுக்கு (23) தருமபுரியை சேர்ந்த அய்யப்பன் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்த இவர் தனது பெண் குழந்தையோடு (3) அய்யப்பனுடன் வசித்து வந்தார். ஆனால் அய்யப்பன் குழந்தையின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும் இருவரையும் வீட்டுக்குள் பூட்டியும் கொடுமைபடுத்தி உள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!