News October 21, 2025
ஒகேனக்கலில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கலில் தற்போது நீர்வரத்து அதிகரித்து உள்ளது என செய்தி வெளியாகியது. அதன்படி 20,000 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து தற்போது 24,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. அதனால் விடுமுறை தினமான இன்று (அக்.21) ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளது. மேலும் பரிசல் இயக்குவதற்கும், காவிரியாற்றில் குளிக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை நீடிக்கிறது.
Similar News
News February 8, 2026
தருமபுரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

தருமபுரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT!
News February 8, 2026
தருமபுரியில் ஆட்சியர் ஆய்வு!

தருமபுரி பேருந்து நிலையம் திறந்து வைத்ததை தொடரந்து பொதுமக்கள் அனைவரும் அனைத்து மாவட்டங்களுக்கும் மற்றும் அனைத்து ஊர்களுக்கும் பயனம் செய்வதற்கு ஏதுவாக அனைத்து விதமான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை நான்கு ரோடு சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் சதீஸ் இன்று (பிப்.7) ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
News February 8, 2026
தருமபுரி: தூக்கி வீசப்பட்ட மாணவன் பலி!

பாலக்கோடு குப்பன் கொட்டாயை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் ஹரி பிரசாந்த் அப்பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சாலையை கடக்கும்போது அவ்வழியாக வந்த லாரி மோதி தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் நேற்று (பிப்.7) மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


