News September 14, 2025

ஒகேனக்கலில் தொடரும் தடை

image

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகள் நிரம்பிவிட்டன. பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. எனவே, ஒகேனக்கலில் பொதுமக்கள் குளிப்பதற்குத் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Similar News

News September 14, 2025

தருமபுரி: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

image

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <>சைபர் குற்றப்பிரிவு <<>>மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். SHARE IT!

News September 14, 2025

தருமபுரி: டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி வகுப்பு

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, வாராந்திர டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்த வகுப்புகள், வரும் செப்.15 முதல் துவங்க உள்ளன. இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையோ அல்லது 04342-288890 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News September 14, 2025

தர்மபுரி: பொறியாளரா நீங்க? கை நிறைய சம்பளத்தில் அரசு வேலை!

image

மத்திய அரசு நிறுவனமான இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஆசோசியேட் இன்ஜினியர் கிரேடு 2 & 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கெமிக்கல், மெக்கானிக்கல், சிவீல், சுற்றுச்சூழல், தொழில்துறை மாசுபாடு குறைப்பு, எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமெண்டேசன், உலோகவியல் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் வரும் செப்.24க்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். வயது 41க்குள் இருக்க வேண்டும். ரூ.80,000 – ரூ.ரூ.91,200 சம்பளம் வழங்கப்படும். SHARE IT

error: Content is protected !!