News July 15, 2024

ஐடிஐ-இல் பழகுனர் பயிற்சிக்கான சேர்க்கை

image

தேசிய தொழிற்பழகுனர் திட்டத்தின் கீழ், அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, நீலகிரி மாவட்ட அளவில் தொழிற் பழகுனர்களுக்கான, ‘பிரதமரின் தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை’ முகாம் நடக்க உள்ளது. குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடக்கிறது.

Similar News

News August 14, 2025

நீலகிரி: சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவு பணி!

image

குன்னுார் காட்டேரி பூங்காவில், இரண்டாம் சீசனுக்காக, 1.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி நேற்று துவங்கியது. பூங்காவில் பூஜைகள் போடப்பட்டு, நீலகிரி தோட்டக்கலை துணை இயக்குனர் நவநீதா, நடவு பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், குன்னுார் தோட்ட கலை துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, தோட்டக்கலை அலுவலர் பிரகாஷ், மற்றும் பண்ணை பணியாளர்கள் பங்கேற்றனர்.

News August 14, 2025

நீலகிரி: இ-நாம் திட்டத்தில் கலெக்டர் அறிவிப்பு!

image

நீலகிரி மக்களே விவசாய விளை பொருள்களை விற்க ‘இ-நாம்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதனால் விவசாய விளை பொருள்களை கொண்டு செல்வதற்கு செலவு குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலரை அணுகி, ‘இ-நாம் மற்றும் பண்ணை வாயிலாக உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம். என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

இ-நாம்’ செயலி வாயிலாக விற்பனை செய்ய அழைப்பு!

image

குன்னுார், ஊட்டி ஆகிய பகுதிகளில் இரு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், ‘இ-நாம்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த முறையில் ஏல நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும். மாவட்ட கலெக்டர் கூறுகையில், விவசாயிகள் அனைவரும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி, ‘இ-நாம் மற்றும் பண்ணை வாயில் வணிகம்’ வாயிலாக உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களை அதிக விலைக்கு விற்கலாம்.

error: Content is protected !!