News December 9, 2025
‘ஏலியன் எலும்புக்கூடு’ பற்றி தெரியுமா?

சிலி நாட்டின் அட்டகாமா பாலைவனத்தில் 2003-ல், வெறும் அரை அடி கொண்ட எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. அதன் தலை மட்டும் பெரிதாக வித்தியாசமாக இருந்ததால், அது ஏலியனின் எலும்புக்கூடு என வதந்தி பரவியது. ஆனால் சுமார் 15 வருட ஆய்வுக்கு பின் தான் தெரிந்தது, அது ஏலியன் அல்ல, ஒரு பெண் குழந்தையின் எலும்புக்கூடு என்று. 7 மரபணு குறைபாடுகளுடன் பிறந்து, குழந்தை இறந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
Similar News
News April 8, 2026
இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள்,வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோருக்கு இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் பணி நடைபெற்றது. இந்த பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் இன்று (ஏப்.08) நடைபெற்றது.
News April 8, 2026
தவெகவுடன் கூட்டணி.. கடைசி நேரத்தில் பரபரப்பு

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி விரும்பியதாக ஆதவ் ஆர்ஜுனா முக்கிய தகவலை கூறியுள்ளார். ஆனால், ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் டெல்லி சென்று இந்த கூட்டணி அமையவிடாமல் தடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் உடன் கூட்டணி அமையாவிட்டாலும், அந்த ஓட்டுகள் தவெகவுக்கு கிடைத்துவிடும் என்றும் ஆதவ் பேசியுள்ளார். இதுபற்றி உங்க கருத்து?
News April 8, 2026
இந்தியர்கள் ஈரானை விட்டு வெளியேற அறிவுறுத்தல்

ஈரானில் அதிகரித்து வரும் போர் பதற்றம், பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. எந்தவித ஆலோசனையும் இன்றி சர்வதேச எல்லைகளுக்கு செல்லக்கூடாது என்றும், உதவிக்கு இந்த எண்களை +989128109115, +989128109109 +989128109102, +989932179359 தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


