News February 1, 2025
ஏலச்சீட்டு மோசடி: கணவன், மனைவிக்கு சிறை

ஆவடி, பாரதிதாசன் நகர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஹெலன் (40). இவரிடம் செல்வி என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வருவதாக கூறி கடந்தாண்டு முதல் ரூ.3 லட்சம் வரை வாங்கி விட்டு பணத்தை திருப்பி தராமல் தலைமறைவானார். இதுகுறித்து ஹெலன் அளித்த புகாரின் பேரில், ஆவடி போலீசார் பண மோசடி செய்த ஜெகதீஸ்வரராவ் (42) மற்றும் அவரது மனைவி செல்வி (35) இருவரையும் நேற்று முன்தினம் (ஜன.30) கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 1, 2026
திருவள்ளூர் மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

▶காவல் கட்டுப்பாட்டு அறை – 100, ▶தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, ▶இலவச தாய், சேய் ஊர்தி – 102, ▶போக்குவரத்து காவலர் – 103, ▶விபத்து உதவி எண் – 108, ▶பேரிடர் கால உதவி – 1077, ▶குழந்தைகள் பாதுகாப்பு – 1098, ▶பெண்கள் பாதுகாப்பு – 181, ▶கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, ▶ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, ▶கண் வங்கி – 1919, ▶எரிவாயு – 1716, ▶BSNL – 199. ஷேர் பண்ணுங்க
News March 1, 2026
திருவள்ளூர்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

திருவள்ளூர் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE
News March 1, 2026
திருவள்ளூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


