News March 21, 2024
ஏலச்சீட்டு நிறுவன ஊழியர்களிடம் ரூ.12.15 லட்சம் பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலைக்குழு கீழக்கரை தனி வட்டாட்சியர் ராமமூர்த்தி, சிறப்பு எஸ்ஐ வேல்முருகன் உள்ளிட்டோர் உச்சிப்புளி பருந்து விமான தளம் அருகே இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து தனியார் ஏலச்சீட்டு நிறுவன ஊழியர்கள் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.12.15 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இத்தொகையை வருமான வரி துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News January 26, 2026
இராம்நாடு: ரூ.3000 கோடி – போதைப்பொருள் பறிமுதல்

இந்தியப் பெருங்கடலில் பயணித்த 2 மீன்பிடிப் படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். சோதனையில் 184 கிலோ ஹெராயின், 112 கிலோ ஐஸ் போதைப் பொருட்களை பதுக்கி வைத்தது
தெரியவந்தது. இதையடுத்து, போதைப் பொருட்கள் மற்றும் இரு படகுகளையும் பறிமுதல் செய்து படகுகளில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 11 பேரை கைது செய்தனர். (இதன் மதிப்பு ரூ.3000 கோடி என கூறப்படுகிறது)
News January 26, 2026
இராம்நாடு: ரூ.32,000 சம்பளத்தில் அரசு வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது: 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
இராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் தைப்பூச தெப்ப திருவிழாவை முன்னிட்டு ராமநாதசுவாமி திருக்கோவில் (பிப்.01) ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என்று திருக்கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். எனவே பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அந்த நேரத்தில் வருகை புரிவதை தவிர்க்க அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க.


