News May 1, 2024

ஏற்காடு விபத்து: உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தல்!

image

மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று வெளியிட்ட செய்தியில், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்து அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். விபத்தில் உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அனுதாங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் பலியானவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News August 24, 2025

பெண் குழந்தைகளுக்கான விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!

image

சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் நவ.10 வரை அரசு விருதுகள் இணையதளத்தில் http://awards.tn.gov.in விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மாவட்ட சமூகநல அலுவலகம்,முதல் தளம் அறை எண்.126,மாவட்ட ஆட்சியர் வளாகம்,சேலம் 636001 முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News August 24, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

News August 24, 2025

சேலம் வழியாக செல்லும் ரயிலில் மாற்றம்!

image

பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஆக.27- ஆம் தேதி முதல் செப்.02- ஆம் தேதி வரை சேலம் வழியாக செல்லும் சென்னை சென்ட்ரல்-மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (12671) கோவை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!