News December 12, 2025
ஏறுமுகத்தில் இந்திய சந்தைகள்!

மும்பை தேசிய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. இதில், சென்செக்ஸ் 352 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 85,170 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 109 புள்ளிகள் உயர்ந்து, 26,007-ஐ எட்டியுள்ளது. உலகளாவிய சந்தைகளின் வலுவான ஆதரவு காரணமாக ஏற்றம் காணப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உலோக பங்குகளே அதிகம் லாபம் ஈட்டி, சந்தைக்கு ஊக்கமளித்துள்ளன.
Similar News
News March 29, 2026
தமிழ்நாடே.. தலைப்புச் செய்திக்கு ready-ஆ?

இன்னும் சற்று நேரத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையை CM ஸ்டாலின் வெளியிட உள்ளார். அதற்கு ஹைப் ஏத்தும் விதமாக தமிழ்நாடே தலைப்புச் செய்திக்கு ready-ஆ? என தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News March 29, 2026
₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு UPDATE

ஆட்சி மாறினால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படுமா என மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மகளிருக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, அதிமுக ஆட்சிக்கு வந்தால் குலவிளக்கு திட்டம் என்ற பெயரில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான விதிமுறைகள் குறித்து அதிமுக தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. SHARE
News March 29, 2026
₹10 கோடி கிடைத்தும் நேர்மையை கைவிடாத பெண்

வங்கி கணக்கில் தவறுதலாக ₹1,000 வரவு வைக்கப்பட்டாலே அதை யாரும் திருப்பி தர மாட்டார்கள். ஆனால் உ.பி.,யை சேர்ந்த ரீட்டா என்ற பெண்மணியோ இதற்கு மாறாக தனது நேர்மையை வெளிபடுத்தியுள்ளார். அவரது வங்கி கணக்கில் தவறுதலாக ₹9,99,49,588 வரவு வைக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு ரூபாய் கூட தொடாமல், இதுகுறித்து வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது நேர்மைக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.


