News November 3, 2025
ஏர்டெல் நிகர லாபம் ₹6,792 கோடியாக அதிகரிப்பு

ஏர்டெல் நிறுவனத்தின் 2025-26 நிதியாண்டின், 2-ஆவது காலாண்டின் நிகர லாபம் ₹6,792 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ₹3,593 கோடியாக இருந்த நிலையில், தற்போது 89% அதிகரித்துள்ளது. அதேபோல், ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து ஈட்டும் சராசரி வருவாய் (Average Revenue per User) ₹256 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய பங்குச்சந்தையில் ஏர்டெலின் பங்குகள் ஏற்றம் கண்டன.
Similar News
News November 4, 2025
BREAKING: கோவை சம்பவத்தில் 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்

கோவையில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை தனிப்படை போலீசார் சுட்டுப்பிடித்தனர். CCTV காட்சிகளின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை போலீசார் குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகியோரை துடியலூர் பகுதியில் சுற்றி வளைத்தனர். தாக்குதல் நடத்தி 3 பேரும் தப்பிக்க முயன்றதால் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீஸ் கூறுகிறது. 3 பேரும் கோவை அரசு ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
News November 4, 2025
நடிகர்கள் அரசியலில் நடிக்க கூடாது: சரத்குமார்

அரசியலுக்கு வரும் நடிகர்கள் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் நடிகர்களும் அரசியலுக்கு வரலாம் என்றும், ஆனால் அதிலும் நடிக்க கூடாது எனவும் அவர் பேசியுள்ளார். அவர்களின் தகுதி, பேசும் விஷயங்கள், அவற்றை செயல்படுத்தும் திறன் உள்ளதா? எதற்காக அரசியலுக்கு வருகின்றனர் என்பதை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
News November 4, 2025
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பேராபத்தான சூழல்: சீமான்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவதாக சீமான் சாடியுள்ளார். X-ல், கோவை மாணவிக்கு நடந்த கொடூரம் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்கும் வரை இதுபோன்ற சமூகக் குற்றங்களை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், கோவை கொடூரத்திற்கு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட திமுக அரசு தவறியதே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


