News May 7, 2025
ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

பாணாவரம் அடுத்த கீழ்வீராணம் கிராமத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவரது மகன் நிஷாந்த் (6). இவரது உறவினர் ஆற்காட்டைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவரது மகன் வீரவேல் (8), கோடை விடுமுறையை முன்னிட்டு நிஷாந்த் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று சூரைக்குளம் ஏரியில் குளிக்க இருவரும் சென்றனர். அப்போது மீன்களைப் பார்க்க தண்ணீரில் இறங்கியபோது, ஆழமான பகுதிக்கு தண்ணீர் இழுத்து சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Similar News
News May 8, 2025
ராணிப்பேட்டை +2 மாணவர்கள் கவனத்திற்கு

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு கிளிக் https://www.tngasa.in/ செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2. மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News May 7, 2025
ராணிப்பேட்டையில் மதுபோதையில் தகராறு

பள்ளூரில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது இங்கு நேற்று இரவு கோவிந்தவாடி அகரத்தைச் சேர்ந்த கோவர்தனன், பள்ளூரை சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் இடையே போதையில் தகராறு ஏற்பட்டது. இதில் செல்வராஜை கோவர்தனன் கை, கட்டையால் தாக்கினார். காயமடைந்த செல்வராஜ் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நெமிலி போலீசார் வழக்குப்பதிந்து இன்று கோவர்த்தனனை கைது செய்தனர்
News May 7, 2025
ராணிப்பேட்டையில் இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மே-1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100