News April 15, 2025

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழப்பு

image

பாசார் கிராமத்தில் உள்ள சித்தேரி ஏரியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சிறுமிகள் குளிப்பதற்காக சென்றனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஏரியில் குளித்துக் கொண்டிருந்த சிவசக்தி(11), ஸ்வேதா(12) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது சம்பவம் தொடர்பாக ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறையில் குழந்தைகளை கண்காணியுங்கள் பெற்றோர்களே. 

Similar News

News January 22, 2026

கள்ளக்குறிச்சியில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் கோரிக்கை மனு!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை புதிய ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக சந்தித்து ஊராட்சித் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வைத்து மனு கொடுத்தனர். இதில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
.

News January 22, 2026

கள்ளக்குறிச்சி மக்களுக்கு முற்றிலும் இலவசம்! APPLY NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அங்கும் அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <>இங்கு <<>>கிளிக் செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3.“Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்). உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!