News May 2, 2024

ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் மாயம்

image

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் ஏரியில் தனியார் கல்லூரி இன்ஜினியரிங் மாணவர் கரண் (21) தனது நண்பர்களுடன் நேற்று ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற கரண் சிறிது நேரத்தில் மாயமானார். நண்பர்கள் தேடியும் கிடைக்காததால் பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் பொன்னேரி தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கிய கரணை தேடி வருகின்றனர்.

Similar News

News August 27, 2025

திருவள்ளூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) 044-27662400 திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். *உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க*

News August 27, 2025

திருவள்ளூர்: பணப்பிரச்சனை நீங்க இங்க போங்க

image

திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் ’11விநாயகர் சபை’ உள்ளது. திரிபுராந்தர்களை அழிக்க சென்ற சிவன் விநாயகரை வணங்காமல் சென்றதால், தன்னை வணங்காமல் சென்றது ஏன் என விசாரணை சபையை அமைத்தார். அது தான் இந்த 11 விநாயகர் சபை. வெங்கடாஜலபதி தன் கடனை அடைக்க, இங்கே வந்து தீர்வு கண்டார். அதனால் இங்கு சென்று வழிபட்டால் செல்வம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் சென்று வாருங்கள். SHARE IT

News August 27, 2025

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறிய எம்.எல்.ஏ

image

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், ஆவடி தி.மு.க சட்டமன்றத் மன்றத் உறுப்பினர் சா.மு நாசர் தனது சமூக வலைதள பக்கத்தில் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்களை பொது மக்களுக்கு கூறியுள்ளார். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.

error: Content is protected !!