News March 23, 2024

ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

image

திருச்சி மாவட்டம் கல்லக்குடி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஒரு முறை பயணம் செய்ய, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 4, 2025

திருச்சி: நெடுந்தூர ஓட்டப் போட்டி அறிவிப்பு

image

உடல் தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் “அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி” திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வரும் நவ.8ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலக எண்ணை (0431-2420685) தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 4, 2025

திருச்சி: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News November 4, 2025

திருச்சி: கிராம ஊராட்சி செயலர் வேலை!

image

திருச்சி மாவட்டத்தில் 72 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்தது 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE <<>>
6. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!