News April 1, 2024
ஏடிஎம் மையத்தில் ஏமாற்றி பணம் எடுத்தவர் கைது

ராமநாதபுரத்தை சேர்ந்த சுவிங்லின் என்பவர் காரைக்காலில் உள்ள வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு சென்று ஏ.டி.எம் பின் செட் பண்ண தெரியாதவர்களிடம் உதவி செய்வது போல் நாடகமாடி அவர்களின் ஏ.டி.எம் கார்டை மறைத்து வைத்துக்கொண்டு பழைய ஏ.டி.எம் கார்டை கொடுத்து ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார். இதனை அடுத்து காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த ஏ.டி.எம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News April 19, 2025
புதுச்சேரி: தனியார் வங்கியின் லிங்க் மூலம் மோசடி

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது வாட்ஸ் ஆப்பில் தனியார் வங்கியின் லிங்க் ஒன்று வந்துள்ளது. வெங்கடேசன் அந்த லிங்கை கிளிக் செய்து வங்கி விவரங்களை பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.23 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. இதுகுறித்து நேற்று சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 18, 2025
புதுச்சேரி: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் <
News April 18, 2025
பிஎம் கிஷன் யோஜனா, சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “புதுவையில் வாட்ஸ்ஆப் குழுக்களில் தற்போது பிரதான் மந்திரி கிஷன் நியூ யோஜனா போன்ற பெயா்களில் கடன் தருவதாகக் கூறி குறுஞ்செய்தி மற்றும் போலியான செயலிகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவை, இணையவழி மோசடியாளா்கள் உருவாக்கப்பட்ட போலி செயலிகளாகும். ஆகவே, அவற்றை யாரும் நம்ப வேண்டாம், என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிறருக்கு ஷேர் செய்யவும்..