News August 28, 2025
ஏங்க.. கூமாபட்டி அணைக்கு ரூ.10 கோடிங்க…

கூமாபட்டி அருகே வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள பிளவக்கல் அணைப் பகுதியில் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2024ம் ஆண்டு முதலமைச்சர் விருதுநகருக்கு வந்த சமயம் இதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அப்பகுதியில் சுற்றுச் சுவர், குழந்தைகள் விளையாடும் இடம், உடற்பயிற்சிக் கூடம், செல்ஃபி பாயிண்ட் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
Similar News
News November 5, 2025
விருதுநகர்: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)
2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)
3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)
4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)
5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 5, 2025
சிவகாசி: செல்போன் கடைகளை குறிவைக்கும் கொள்ளையர்கள்

சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையின் கூரையை பிரித்து கடையில் இருந்த செல்போன் மற்றும் ரூ.11 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். 2 நாட்களுக்கு முன் அருகில் உள்ள செல்போன் கடையில் திருடிய 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு செல்போன் கடையில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News November 5, 2025
விருதுநகர்: இந்த எண்களை கட்டாயம் SAVE பண்ணிக்கோங்க

தற்போது அவசர உதவிக்கு 100, ஆம்புலன்ஸ் சேவைக்கான 108, தீயணைப்பு துறைக்கான 101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன அதை பற்றி பார்க்கலாம். பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு – 181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால் – 1094 இந்த முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


