News July 21, 2024
ஏக்கருக்கு ரூ.40,750 காப்பீடு

கள்ளிக்குடி, குராயூர், சிவரக்கோட்டை பகுதிகளில் வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள், பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.40,750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.815 செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்ய ஆக.31 கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
‘போலீஸ்கிட்ட போட்டு கொடுத்தவருக்கு’ வெட்டு

மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி 55. இவர் வீட்டருகே பராமரிப்பற்ற கட்டடம் ஒன்றில் இளைஞர்கள் சிலர் மது அருந்துவது, கஞ்சா அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசாருக்கு பாண்டி தொடர்ந்து தகவல் தெரிவித்தார். இதனால் ஆத்திரமுற்றவர்கள் இரவு வீட்டின் முன் பேசிக்கொண்டிருந்த பாண்டி, மகன் கார்த்திக்கை 35, பட்டா கத்தியால் வெட்டி, ‘போலீஸ்கிட்டே போட்டு கொடுக்குறீயா’ என மிரட்டியுள்ளனர்.
News July 8, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (07.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 7, 2025
தந்தை மகனுக்கு அறிவாள் வெட்டு – காவல்துறை விளக்கம்

மதுரை சோலை அழகுபுரத்தில், கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததால் தந்தை மகனுக்கு அறிவாள் வெட்டு என்று இன்று ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், காவல்துறை சார்பில் மறுப்பு அறிக்கை வெளியாகியுள்ளது. சொத்துத் தகராறில் கார்த்திக் மற்றும் அவரது மாமா நாகரத்தினம் என்பவருக்கும் இடையே நடந்த பிரச்சினையில் எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.