News December 4, 2024

எஸ்.பி. தலைமையிலான குற்ற ஆய்வுக் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட அனைத்து காவல் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மொத்தம் 38 நபர்களை (04.12.2024) இன்று நேரடியாக வரவழைத்து பாராட்டினார்.

Similar News

News December 24, 2025

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில் இதுவரை 25 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இதில் ரத்த கொதிப்பு, கண், காது, மூக்கு தொண்டை, அல்ட்ரா சவுண்ட், பெண்களுக்கு கர்ப்பப்பை, வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மாவட்டத்தில் 36,409 பேர் மருத்துவ பயன் அடைந்துள்ளதாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News December 24, 2025

புதுகை: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் SIR-க்கு பிறகு 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில் புதுகை மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள இங்கே<> க்ளிக் <<>>செய்யவும். SHARE

News December 24, 2025

புதுக்கோட்டை: முதியவர் மீது மோதி பைக்

image

கந்தர்வக்கோட்டை அடுத்த அரியாண்டிபட்டியிலிருந்து கந்தர்வக்கோட்டைக்கு பழனிச்சாமி (67) என்பவர் நேற்று சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அரியாண்டி சாலையில் அவருக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த ஹரிஹரசுதன் (18) மோதியதில் பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!