News December 3, 2025
எஸ்.பி அலுவலகத்தில் நடைப்பெற்ற குறைத்தீர்வு கூட்டம்

திருப்பத்தூரில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (டிச.03) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமரன், அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 15 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரித்தார்.
Similar News
News December 3, 2025
1531 புத்தகங்கள் விற்பனை! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

திருப்பத்தூர் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்றது. 4-ஆம் நாளான நேற்று (டிச.02) 1531 புத்தகங்கள்,1,94,057 மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது. என மாவட்ட நிர்வாகம் இன்று (டிச-03) அறிவித்துள்ளது. ஆறாம் நாளான நாளை வழக்கறிஞா் மணிமொழி, மற்றும் சமூக செயற்பாட்டாளர் மதிவதனி பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
News December 3, 2025
திருப்பத்தூர்:டிசம்பர் 06-ல் மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற (டிச.06) ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் ” நலன் காக்கும் ஸ்டாலின் ” திட்டத்தின் கீழ் 18-ஆவது மருத்துவ முகாம் திம்னாமுத்தூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி நடைபெறவுள்ளது. 40- வயதிற்கு மேற்பட்டோர், மக்கள் கலந்துக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
News December 3, 2025
திருப்பத்தூர்:காலஅட்டவணையை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கான கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் மறு வரையறை செய்யப்பட்டுள்ளது. அதில் கணக்கீட்டிற்கான காலம், பட்டியல் வெளியிடும் நாள், சரி பார்ப்பதற்கான இறுதி நாள், வெளியிடும் நாள் போன்றவற்றை வெளியிட்டுள்ளது. அதனை மாவட்ட வலைதளத்தில் ஆட்சியர் பகிர்ந்துள்ளார்.


