News July 12, 2024
எஸ்எஸ்ஐ உள்பட காவலர்கள் தனிப்பிரிவுக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்த 6 பேர் தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி எஸ்எஸ்ஐ ரவிச்சந்திரன் கரியாலூருக்கும், காவலர்கள் ராமதாஸ் கீழ்குப்பத்திற்கும், சீனுவாசன் கள்ளக்குறிச்சிக்கும், சிவமுருகன் வரஞ்சரத்திற்கும், மனோகரன் சி.சேலத்திற்கும், இளந்திரையன் சங்கராபுரத்திற்கும் இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்பி ரஜத்சதுர்வேதி உத்திரவிட்டுள்ளார்.
Similar News
News August 28, 2025
கள்ளக்குறிச்சியில் என்னவெல்லாம் இருக்கு.!

கள்ளக்குறிச்சி நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் கல்வராயன் மலை அமைந்துள்ளது. கோமுகி அணையும், தாகப்பாடி அம்மன் ஆலயும் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும். கல்வராயன் மலையடிவாரத்தில் மலைகளுக்கிடையில் கோமுகி அணை, மேகம்,பெரியார்,பண்ணியப்பாடி போன்ற அருவிகள் காணப்படுகின்றன. காட்டுப் பன்றி,செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளைத் காணும் வாய்ப்பும் கிடைக்கலாம். இங்கு பலர் சாகச சுற்றுலா மலையேற்றம் செய்கின்றனர்.
News August 28, 2025
கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆக.28) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
News August 28, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம். திருக்கோவிலூர், சின்னசேலம் , சங்கராபுரம். ஆகிய பகுதிகளுக்கு நாளை 29/8/2025 நடைபெற உள்ளது. இங்கு 13 துறைகளைச் சார்ந்த 43 வகையான சேவைகளை பெறலாம் பிறப்புச் சான்றிதழ் வருமானவரி சான்றிதழ் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தவறியோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.