News August 10, 2025
எழும்பூர் – செங்கோட்டை சிறப்பு ரயில் 1/3

வரும் 14-ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக செல்லும். 17ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். <<17358932>>தொடர்ச்சி<<>>
Similar News
News August 10, 2025
சென்னை: நகைக்கடை வைக்க ஆசையா?

சென்னையில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி’ வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள் <
News August 10, 2025
மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மேயர்

சென்னை புறநகர் பகுதிகளில் பெருநகர மாநகராட்சி தனியார் அமைப்புகளுடன் இணைந்து, இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள பேருந்து நிலையம் அருகே இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமை மேயர் பிரியா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இம்முகாமில் காய்ச்சல், சளி மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
News August 10, 2025
19 மின்சார ரயில்கள் ரத்து

பொன்னேரி, கவரப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடைபெறுகின்றன. இதனால் சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல், சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை – சென்ட்ரல், கடற்கரை – கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி – கடற்கரை, சென்ட்ரல் – ஆவடி இடையே இன்று மற்றும் நாளை (ஆகஸ்ட் 10, 11) 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க