News November 19, 2024
எல்லை பிரிப்பதில் பிரச்னை: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தில் உள்ள அரியலுார் திருக்கை மற்றும் டட் நகர் ஊராட்சிகளின் எல்லை பிரிப்பு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அரியலுார் திருக்கை மக்களின் கருத்தை கேட்காமல், பாரபட்சமாக நடவடிக்கை எடுப்பதை கண்டித்து, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து தாலுகா அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ.அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.
Similar News
News August 6, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் பகுதியில் இன்று (ஆக.06) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News August 6, 2025
விழுப்புரத்தில் மாபெரும் வேலைவாயப்பு முகாம்

விழுப்புரம் ஊரக வாழ்வாதார இயக்கம்&வெற்றி நிச்சயம் திட்டம் சார்பில் வரும் ஆக.9 அன்று செஞ்சி ஸ்ரீ ரங்கபூபதி கலை&அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் 15,000-க்கும் மேற்பட்ட ஆட்களை தேர்வு செய்கின்றன. 8th, 10th, 12th,ITI,DIP.,UG,PG, BE படித்தவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தகவலுக்கு 9787928247, 8248727719, 9080674133. *ஷேர் பண்ணுங்க
News August 6, 2025
விழுப்புரம் தாசில்தார் மீது புகாரளிப்பது எப்படி?

விழுப்புரம் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்