News February 4, 2025
எம்.டி, எம்.எஸ் 3 ஆம் கட்ட கலந்தாய்வு பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள் நடந்து முடிந்து, மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியானவர்கள் பட்டியல் மற்றும் காலியிடங்கள் குறித்த விவரங்களை சென்டாக் நிர்வாகம் நேற்று (பிப்.3) வெளியிட்டுள்ளது.
Similar News
News September 9, 2025
புதுச்சேரி: மாவட்ட நிர்வாகம் முக்கிய தகவல்!

காரைக்கால் அரசு பொது மருத்துவ மனையில் வரும் வெள்ளிக்கிழமை (12.9.2025) அன்று புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை புரிந்து, மருத்துவ சேவைகளை வழங்க உள்ளார்கள். காரைக்கால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.
News September 9, 2025
புதுவையில் எம்.எல்.ஏ நேரு முற்றுகை போராட்டம்

புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை காமராஜர் வீதி, புது தெரு, முடக்கு மாரியம்மன் கோவில் வீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்த குடிநீரை அருந்தி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
News September 9, 2025
புதுவை: போதையில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்

கோட்டுச்சேரி வரிச்சிக்குடி மீனவர் மதி, மனைவி ஜெயப்பிரதா(40)
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்
சம்பவத்தன்று அதிக மது போதையில் மனைவிடம் ஏற்பட்ட தகராறில் நிதானமிழந்து கத்தியால் ஜெயப்பிரதாவை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் வரிச்சிக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.