News March 13, 2025

எப்போதும் வென்றான் ஊர் பெயர் காரணம் தெரியுமா?

image

ஒரு சிலிர்க்க வைக்கும் ஊர் பெயர் தான் எப்போதும் வென்றான். சுமார் 700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராஜகம்பள சமூகத்தை சேர்ந்த சோலையப்பன் பாண்டிய மன்னர்களின் போர் வெற்றிக்கு உதவினார். அதனால் பாண்டிய மன்னர் அவரை எப்போதும் வென்றான் சோலையப்பன் என அழைத்தார். அதுவே எப்போதும் வென்றான் என ஊர் பெயராகியது. போர் ஒன்றில் சோலையப்பன் இறந்துவிடவே ராஜகம்பள சமூகத்தினர் அவருக்கு கோவில் கட்டி வழிபடுகின்றனர். ஷேர் it

Similar News

News August 24, 2025

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் மதுரை எம்பி சிறப்புரை

image

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா நிகழ்வில் நேற்று முதல் நாள் சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடியைச் சேர்ந்த பழம்பெரும் எழுத்தாளர் அய்கோ தமிழர் வழிபாட்டு மரபு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் மதுரை எம்பி வெங்கடேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News August 24, 2025

தூத்துக்குடி எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தந்த கலெக்டர்

image

தூத்துக்குடியில் 6-ம் ஆண்டு புத்தகத்தில் விழா கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அந்த அரங்கத்தில் தனியாக ஒரு அரங்கு ஏற்பாடு செய்து அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எழுத்தாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

News August 23, 2025

தூத்துக்குடி: கை ரேகை வேலை செய்யலையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கே க்ளிக் செய்து<<>> Grievance Redressal, தூத்துக்குடி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!