News January 28, 2026

எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டார்: நயினார்

image

செங்கோட்டையனை நினைத்து தான் மிகவும் வருத்தப்படுவதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். செங்கோட்டையனை 30 ஆண்டுகளாக தெரியும் என்ற அவர், KAS-ஐ முழுவதுமாக உணர்ந்தவன் என்ற அடிப்படையில் வருத்தப்படுகிறேன் என்றார். மேலும், அரசியலில் ஒரு காலத்தில் எப்படி இருந்த செங்கோட்டையன், தற்போது இப்படி ஆகி விட்டாரே எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

Similar News

News February 7, 2026

பழி சுமத்திய பாகிஸ்தான்.. கொந்தளித்த இந்தியா

image

இஸ்லாமாபாத் <<19067497>>மசூதி தாக்குதலுக்கு<<>> இந்தியாவை குற்றஞ்சாட்டிய பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய அரசு, பிரச்னைக்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு காண்பதை விடுத்து, மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளது. மேலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News February 7, 2026

தெய்வங்களை அவமதித்தால் அமைதி கூடாது: பவன் கல்யாண்

image

ஒவ்வொரு இந்து பக்தருக்கும் தர்மத்தை காக்கும் பொறுப்பு உள்ளதாக ஆந்திரா DCM பவன் கல்யாண் கூறியுள்ளார். யாராவது இந்து தெய்வங்களை அவமதித்தாலோ, தர்மத்தை கேலிசெய்தாலோ; அமைதியாக இருக்காமல் நம் வலிமை வெளிப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்து தர்மத்தை காப்பது என்பது பிற மதங்களுக்கு எதிராக இருப்பது அல்ல என்றும், நம் நம்பிக்கையை பாதுகாப்பதே எனவும் குறிப்பிட்டுள்ளர்.

News February 7, 2026

நேரு பொன்மொழிகள்!

image

*செயலுக்கு முன்பே விளைவுகள் குறித்து எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகுதூரம் *சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன் *உண்மையை சில சமயம் அடக்கி வைக்க முடியும் ஆனால் ஒடுக்கிவிட முடியாது *பிரச்னை இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது *முயற்சிகள் செய்துகொண்டிருப்பவர்களைத் தான் வெற்றிகள் தேடி வரும்.

error: Content is protected !!