News March 18, 2026
என் வீட்டின் மேல் ஏவுகணைகள் பறந்தன: சானியா மிர்சா

ரம்ஜான் பண்டிகைக்காக துபாயிலிருந்து தனது மகனுடன் ஹைதராபாத் திரும்பிய சானியா மிர்சா போர் சூழல் குறித்த தனது அனுபவங்களை அதிர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தங்கள் வீட்டிற்கு மேல் ஏவுகணைகள் இடைமறிக்கப்படுவதை கண்டதாக அவர் கூறினார். அப்படிப்பட்ட சூழலை தங்கள் குழந்தைகள் அனுபவிப்பதை யாருமே விரும்பமாட்டார்கள்; அமைதியற்றதாக உணர்ந்ததால் அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 8, 2026
புதுகை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

புதுகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ புதுகை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04322-220585
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News April 8, 2026
இவர்களுக்கெல்லாம் மாற்றுதான் தவெக: விஜய்

நான் கட்சி ஆரம்பிச்சிட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் போகல; ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் போய்ட்டுதான் கட்சியே ஆரம்பிச்சேன் என்று பரப்புரையில் பன்ச்சாக விஜய் பேசியுள்ளார். மேலும், காமராஜர், அண்ணாதுரை, MGR போன்று யாரும் வர மாட்டார்களா என நீங்கள் ஏங்குவது எனக்கு தெரியும். அதற்காகத்தான் தவெக வந்துள்ளது என்றும் அவர் நெல்லை பரப்புரையில் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News April 8, 2026
தமிழக தேர்தல்.. ECI முக்கிய ஆலோசனை

TN சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக CEC ஞானேஷ் குமார், அர்ச்சனா பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார். காணொலி வாயிலாக நடந்த கூட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு பணிகள், பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்புவது & அவற்றை பாதுகாப்பது குறித்தும் ஞானேஷ் குமார் கேட்டறிந்திருக்கிறார்.


