News December 28, 2025
‘என் சாவுக்கு இவர்கள் தான் காரணம்’

உ.பி., ஃபரூக்காபாத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞரின் உடலில் இருந்து உருக்கமான கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், ’போலீஸ் அளித்த தொல்லைகளால் மனமுடைந்து, வாழ்வதற்கான எண்ணத்தை இழந்துவிட்டேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். பழைய வழக்கு ஒன்றிற்காக போலீஸ் அவரது வீட்டில் அடிக்கடி சோதனை செய்த நிலையில், அந்த இளைஞர் மன உளைச்சலில் விபரீத முடிவை எடுத்துள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல!
Similar News
News January 29, 2026
ஜனவரி 29: வரலாற்றில் இன்று

*1939- சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். *1780 – இந்தியாவின் முதல் செய்தித்தாளான ஹிக்கியின் பெங்கால் கெஜட் தொடங்கப்பட்டது. 1953- ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்டு இந்திய ஏர்லைன்ஸ் உருவானது. *1970 – இந்திய துப்பாக்கிச்சூடு வீரரான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பிறந்ததினம். *2009 – ஈழத்தமிழர்களுக்காக தனக்குத்தானே தீயிட்டு உயிர்மாய்த்த முத்துக்குமார் நினைவுதினம்.
News January 29, 2026
இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து படைத்த சாதனை!

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் சில முக்கிய சாதனைகளை நியூசி., படைத்துள்ளது. அதன்படி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. டி20-யில் பலம் வாய்ந்த இந்திய அணியை அதிக முறை (5) இலக்கை எட்டவிடாமல் தடுத்து முதலிடம். மேலும் செப். 2023 முதல் 13 போட்டிகளுக்கு பிறகு நியூசி. முதல் வெற்றி பெற்றுள்ளது.
News January 29, 2026
தொண்டர்களின் விருப்பமாக கூட்டணி அமையும்: பிரேமலதா

கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தலைமை கழகத்தில் இருந்து அறிவிப்பேன் என பிரேமலதா தெரிவித்துள்ளார். புளியங்குடியில் பேசிய அவர், கடைக்கோடி தொண்டர்களின் விருப்பத்தின் படியே இந்த முறை கூட்டணி அமையும் என்றும், நாம் இடம்பெறும் கூட்டணி தான் இந்தமுறை ஆட்சி அமைக்கும் எனவும் கூறினார். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் சிலர், தவெக தவெக என கோஷமிட்டதால் அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.


