News March 30, 2026
எதிர்கால கணக்கும்.. திருமா எடுத்த முடிவும்

MP ஆக உள்ள திருமாவளவன், சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார் கோயிலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது நிலவும் அரசியல் சூழலை அறிந்தும், எதிர்காலத்தை கணக்கில் கொண்டும் இம்முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மாநில அரசியலில் தனது கவனத்தை செலுத்த வேண்டியிருப்பதாகவும், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு TN அரசியல் சூழல் வெகுவாக மாறும் என்றும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 4, 2026
வாஷிங்டன் மேயர் போட்டியில் தேனி தமிழச்சி

தேனியை பூர்வீகமாகக் கொண்ட ரினி சம்பத் (31) வாஷிங்டன் DC மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதன்மூலம் இத்தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசிய பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். 7 வயதிலேயே அமெரிக்காவுக்கு இவரது குடும்பம் இடம்பெயர்ந்துள்ளது. இதில் போட்டியிடுவதற்கு 4,500 வாக்காளர்களின் கையெழுத்தைப் பெற்று விண்ணப்பம் செய்துள்ளார். இது, தேவையான எண்ணிக்கையை விட அதிகமாம். வாழ்த்துகள்!
News April 4, 2026
வாஷிங்டன் மேயர் போட்டியில் தேனி தமிழச்சி

தேனியை பூர்வீகமாகக் கொண்ட ரினி சம்பத் (31) வாஷிங்டன் DC மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதன்மூலம் இத்தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசிய பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். 7 வயதிலேயே அமெரிக்காவுக்கு இவரது குடும்பம் இடம்பெயர்ந்துள்ளது. இதில் போட்டியிடுவதற்கு 4,500 வாக்காளர்களின் கையெழுத்தைப் பெற்று விண்ணப்பம் செய்துள்ளார். இது, தேவையான எண்ணிக்கையை விட அதிகமாம். வாழ்த்துகள்!
News April 4, 2026
என்.ஆர்.காங்கிரஸை முதல் முறையாக விமர்சித்த விஜய்

புதுச்சேரியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வாக்கு சேகரித்தார். அப்போது, காங்., – திமுக, பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிகளை கடுமையாக விமர்சித்தார். என்.ஆர்.காங்கிரஸை விஜய் விமர்சிப்பது இதுதான் முதல்முறையாகும். ஆண்ட, ஆளும் கட்சிகள் ஏன் இதுவரை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றுத் தரவில்லை என கேள்வி எழுப்பிய அவர், தவெக ஆட்சியில் சட்டப்படி மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார்


