News November 24, 2024
எண்ணூரில் ரவுடி பாலா வெட்டிக் கொலை

எண்ணூரைச் சேர்ந்த ரவுடி பாலா (எ) யுவராஜ் கொலை செய்யப்பட்டார். குற்ற வழக்குகளில் தொடர்புள்ள பாலா, நேற்றிரவு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தனது நண்பர்களுடன் எண்ணூர் பகுதியில் உள்ள சூர்யா என்பவரது வீட்டிற்கு வெளியே அமர்ந்து மது அருந்தியுள்ளார். ஏற்கெனவே, அவருக்கும் நண்பர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்று வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது, பாலாவை நண்பர்கள் வெட்டி கொலை செய்தனர்.
Similar News
News September 1, 2025
சென்னையில் இலவச பயிற்சி!

சென்னை, கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்களில் உள்ள உதவியாளர் பணிக்கு 157 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டுறவு வங்கி தேர்வுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக இன்று (செப்டம்பர் 1) முதல் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். <
News August 31, 2025
சென்னையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 31) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 31, 2025
சென்னை: வற்றாத செல்வம் பெற இங்க போங்க!

சென்னை திருவல்லிக்கேணியில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோயில் உள்ளது. இங்கு வந்து பெருமாளை மனமுருக வேண்டினால், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், திருமண வரம், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு தெரிந்த தம்பதிகளுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.