News August 28, 2025

எண்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சையில் சாதனை

image

சில நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் மூக்கின் வழியாக மூளை நீர் வடிதலிற்கான சிகிச்சை மேற்கொள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தார்.முதியவருக்கு எண்டோஸ்கோப்பிக் என்னும் அரிதான அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சிகிச்சைக்கு பின் முதியவர் நலமுடன் வீடு திரும்பினார். இது மாதிரியான அறுவை சிகிச்சை முதன்முறையாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.

Similar News

News March 6, 2026

மாதவரத்தில் தட்டி தூக்கிய திமுக!

image

மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் R. ராஜேந்திரன் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் (MLA) சுதர்சனம் முன்னிலையில் நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்தனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.

News March 6, 2026

திருத்தணியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா உத்தரவின் பேரில், போலீசார் திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, 190 போதை மாத்திரைகளை கடத்தி வந்த அரக்கோணம் தாலுக்கா, தணிகைப் போரூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (21) என்பவரைப் போலீசார் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்து அவரைச் சிறையில் அடைத்தனர்.

News March 6, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!