News June 24, 2024
எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு

பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஒருங்கிணைப்பு குழு ஈடுபட்டு வருகிறது. இக்குழுவில் புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிச்சாமி உள்ளனர். இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த இபிஎஸ், ஒருங்கிணைப்பு குழுவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால், இபிஎஸ் மீது கோவை ஜேஎம்.1 நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
Similar News
News January 27, 2026
கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிப்பு

நீலகிரி மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக இயற்கை சாயங்களை கொண்டு ஓவியமாக தீட்டியவர் கோத்தகிரியை சேர்ந்த கிருஷ்ணன் அண்மையில் உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. கிருஷ்ணன் இறந்த பிறகு மனைவி சுசிலா தனது 4 குழந்தைகளுடன் கல்லாறு அருகே பாக்குத்தோப்பில் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த இயலாமல் குடிசை வீட்டில் தவித்து வருகிறார்.
News January 27, 2026
கோவை: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

1) நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2) குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3) 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4) 100 சதவித முத்திரைத்தாள், பதிவுக்கட்டணம் இலவசம்
5) <
6) மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம். (SHARE)
News January 27, 2026
கோவை: பிறப்பு, இறப்பு சான்று வேண்டுமா?

கோவை மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். (SHARE பண்ணுங்க)


