News April 25, 2024

எடப்பாடி அருகே விவசாயி குத்திக்கொலை

image

எடப்பாடி அருகேயுள்ள இருப்பாலி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(50). இவருக்கும், உறவினரான அதே பகுதியை சேர்ந்த முருகன் தரப்பினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று(ஏப்.23) காலை கோவிந்தனிடம் முருகன் மற்றும் அவரது மகன்
தாமோதரன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் கோவிந்தனை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 8, 2025

சேலத்திற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை

image

தமிழகம் வழியாக புதிதாக ஒரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, எர்ணாகுளம் – பெங்களூரு இடையிலான ரயில் நாளைய தினம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. ரயிலின் நேர அட்டவணையை, காலை 5.10 மணிக்கு கே.எஸ்.ஆர்.பெங்களூரு ரயில் நிலையத்தில் புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 5.23 மணிக்கு சேலம், 9 மணிக்கு திருச்சூர், பிற்பகல் 1.50 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும்

News November 7, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.07) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News November 7, 2025

JUST IN:சேலத்தில் டெண்டர் கோரியது தமிழக அரசு!

image

சேலத்தில் நவீன வசதிகள் கொண்ட நூலகம் அமைக்கப்படும் என கடந்தாண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்தநிலையில் ரூ. 73 கோடி மதிப்பீட்டில் பாரதிதாசன் பெயரில் சேலத்தில் நூலகம் அமைப்பதற்கான டெண்டரை (Tender) தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. டெண்டர் நடைமுறைகள் முடிந்த பிறகு, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கி, இந்த நூலகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

error: Content is protected !!