News August 7, 2024

எடப்பாடியில் குண்டுவீச்சு: வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

image

சேலம், எடப்பாடி காவல் நிலையத்தில் நேற்று பெட்ரோல் வீசப்பட்ட வழக்கில், சம்பவம் நிகழ்ந்த 10 மணி நேரத்தில் இளைஞர் ஆதித்யன் (20) கைது செய்யப்பட்டார். விசாரணையில், யூ-டியூப்பை பார்த்து பெட்ரோல் குண்டைத் தயாரித்தது தெரிய வந்துள்ளது. இளைஞரின் வாக்குமூலத்தால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மக்களே இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

Similar News

News August 22, 2025

பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

image

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவு செய்ய சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் 12.25 லட்சம் மானியத்தில் மாம்பழத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள மற்றும் உழவா் உற்பத்தியாளா் குழுவைச் சோ்ந்த விவசாயிகள் இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறுமாறு சேலம் மாவட்ட மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

சேலத்தில் முற்றிலும் இலவசம் மிஸ் பண்ணிடாதீங்க!

image

சேலம் மக்களே இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள R.R திருமண மண்டபத்தில் இருசக்கர வாகனம் பராமரித்தல், பழுது நீக்குதல் இலவச பயிற்சி 30 நாட்கள் நடைபெறவுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ஆக.30- க்கும் நேரில் வரவும். கூடுதல் விவரங்களுக்கு 0427 -2274478 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

News August 22, 2025

மகளிர் உரிமைத்தொகைக்கு 73,915 பேர் விண்ணப்பம்!

image

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 20- ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் 63,342 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக் கோரி 73,915 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகைக் கோரி விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!