News December 26, 2024

ஊழியர்களுக்கு நிலம் வழங்கிய பள்ளி நிர்வாகம்

image

கரூர் மாவட்டம், சின்னாண்டாங்கோவில் சாலையில் உள்ள, சங்கரா வித்யாலயா பள்ளியில், நேற்று ஆண்டு விழா நடைபெற்று முடிந்த நிலையில், அங்கு பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு, 1800 சதுர அடி முதல் 2800 சதுர அடி வரை, நிலங்கள் வழங்கப்பட்டது. பத்திர செலவையும் பள்ளி நிர்வாகமே ஏற்று கொள்வதாக கூறியுள்ளது. 6.5 கோடி மதிப்புள்ள நிலங்களை பள்ளி நிர்வாகம் 11 ஊழியர்களுக்கு வழங்கியது.

Similar News

News August 22, 2025

கரூர்: விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை

image

கரூர்: குளித்தலை சப்-கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக அரசு அலுவலர்கள், ஹிந்து அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமை வகித்தார். குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார், குளித்தலை கிருஷ்ணராயபுரம் தாசில்தார்கள் நீதிராஜன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

News August 22, 2025

கரூர்: செல்போன் தொலஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

image

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம்.<> சஞ்சார் சாத்தி <<>>என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint செய்யலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபுடிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்

News August 22, 2025

கரூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

image

கரூர்: மின் அலுவலகத்திற்கு உட்பட்ட சஞ்சய் நகர் மின்பாதையில் இன்று(ஆக.22) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அருள் நகர், சுந்தர் நகர், ஆத்தூர் பிரிவு, செல்லராபாளையம், திருமால் நகர் ,மருத்துவ நகர் ,அமிர்தாம்பாள் நகர், சஞ்சய் நகர், சாந்தி நகர் ,அர்ச்சனா நகர், அம்மன் சிட்டி, பழனியப்பா நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!