News July 25, 2024
ஊர்க்காவல் படை தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில், ஊர்க்காவல் படை துணை வட்டார தளபதி பணிக்கு இளங்கலை பட்டப் படிப்பு முடித்த பெண் விண்ணப்பதாரர்கள் வருகிற ஜூலை 31-ஆம் தேதிக்குள் தங்களது சுய விவரத்துடன் கூடிய விண்ணப்பத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ அடிப்படியில் மேற்கொள்ளும் இப்பணிக்கு ஊதியம் ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 11, 2025
திருவாரூர்:மழைக்காலங்களில் இந்த எண்கள் முக்கியம்

திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதுபோன்ற நேரங்களில் தேவைப்படும் அரசின் அவசர உதவி எண்களை அறிந்து கொள்ளலாம். ▶️ மாநில உதவி எண் – 1070, ▶️ மாவட்ட உதவி எண்- 1077, ▶️ அவசர மருத்துவ உதவி – 104, ▶️ விபத்து உதவி எண் : 108 இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News September 11, 2025
திருவாரூர்: Gas Cylinder-க்கு அதிக பணம் கேட்டால் Call Now

திருவாரூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 11, 2025
திருவாரூர்: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

திருவாரூர் மக்களே கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க! அதாவது, What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருங்க மக்களே (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்) SHARE IT NOW…