News November 16, 2024

ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

image

சென்னை ஊர்க்காவல் படையில் சேர விரும்புவர்கள் 18-50 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்கள் 45 நாட்கள் பயிற்சி பெற்று, காவல் நிலையங்களில் பணியிடப்படுவர். ரூ.560 ஊதியம், சீருடை, தொப்பி, ஷூ வழங்கப்படும். விண்ணப்பங்களை சைதாப்பேட்டையில் பெறலாம். மேலும், விவரங்களுக்கு 94981 35190, 95667 76222 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News September 10, 2025

BREAKING: அடையாறு பகுதியில் ED சோதனை

image

சென்னை, அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடைபெற்ற வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 10, 2025

சென்னை: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

image

சென்னை சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்)

News September 10, 2025

சென்னை அருகே தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்

image

சென்னை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ஜீவன். இவரது தம்பி தேஜ். ஜீவனிடம், தேஜ் 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆனால் ஜீவன் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்கததாதல், ஆத்திரமடைந்த ஜீவன் தம்பியான தேஜை கத்தியால் வெட்டிக் கொலை செய்தானர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!