News June 29, 2024
ஊரை விட்டு ஒதுக்கிவைப்பு: தீக்குளிக்க முயற்சி

மாணிக்கபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக். அவருடைய குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்ததாக கூறி நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பு நடுரோட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். போக்குவரத்துக்கு இடைஞ்சலாக, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும் தேனி விஏஓ கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் கார்த்திக், பழனி, பஞ்சவர்ணம், நாகலட்சுமி, வீரம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Similar News
News November 8, 2025
தேனியில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (65). இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் பொது இடத்தில் தகராறு செய்துள்ளார். இதனை அறிந்த அவரது மகன் முத்துப்பாண்டி, பழனிச்சாமியை கண்டித்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் வேதனை அடைந்த பழனிச்சாமி வீட்டில் யாரும் இல்லாத பொழுது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு (நவ.7) செய்து விசாரணை.
News November 8, 2025
தேனி: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 8, 2025
தேனியில் 78 காலி பணியிடங்கள் – கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் 78 காலி பணியிடங்கள் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. https://theni.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், க.விலக்கு, தேனி- 625512 என்ற முகவரிக்கு 24.11.2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்றார்.


