News December 7, 2025
ஊரக திறனாய்வு தேர்வு:1,706 மாணவ, மாணவியர் பங்கேற்பு!

கரூர்:தமிழக அரசு தேர்வு இயக்ககத்தால்,ஊரக பகுதிகளில், 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு,ஊரக திறனாய்வு தேர்வு,1992 முதல் நடத்தப்பட்டு வருகிறது.வெற்றி பெறும் மானவர்களுக்கு ஆண்டிற்கு,1,000 ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.கரூர் மாவட்டத்தில்,9 மையங்களில்,1,811 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.அதில்,மொத்தம்,1,706 மாணவ,மாணவியர் தேர்வெழுதினர்.105 பேர்தேர்வுஎழுதவரவில்லை.
Similar News
News December 10, 2025
கரூரில் விபத்து; இளைஞர் பலி…!

கரூர்: நாமக்கல் மாவட்டம் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த மனோஜ் (24), தனது பைக்கில் வாங்கல் நாவல் நகர் சாலையில் பயணித்தார். பின்னால் வந்த சந்தோஷ் குமார் ஓட்டிய கார் பைக்கை மோதியதில் மனோஜ் கீழே விழுந்து காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தந்தை கந்தசாமி அளித்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 10, 2025
கரூரில் கட்டட தொழிலாளி மர்ம மரணம்!

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புன்னம்சத்திரம் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி பழனிசாமி (55), இரண்டு மனைவியுடன் இருந்தும் சடையம்பாளையத்தில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவர் மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 10, 2025
கரூரில் கோர விபத்து; மூதாட்டிப் படுகாயம்!

கரூர் வீரணம்பட்டி அம்மன் கோவில் அருகே, மாரியாயி (70) என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அவ்வழியே அடையாளம் தெரியாத வந்த நான்கு சக்கர வாகனம், மாரியாயி மீது மோதியதில் படுகாயம் அடைந்து, மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி மூலமாக குற்றவாளி தேடி வருகின்றனர்.


