News April 12, 2024
ஊட்டி பூங்காவில் விழிப்புணர்வு நிகழ்வு

நீலகிரியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தோட்ட கலைத்துறை சார்பில் உதகை அரசாங்க பூங்காவில் நேற்று (ஏப்.11) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 240 மலர் தொட்டிகளை கொண்டு ‘ஏப்ரல் 19’ வடிவமைக்கப்பட்டது. இதில் பங்கேற்ற சுற்றுலா பயணிகளிடம் கலெக்டர், தவறாமல் வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.
Similar News
News January 26, 2026
JUSTIN: தேவர்சோலையில் தொழிலாளியை தாக்கிய யானை!

நீலகிரி, தேவர்சோலை பேரூராட்சி செம்பக்கொல்லி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், நேற்றிரவு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த யானை, அவரை தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின்படி, அவரை மீட்ட வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக, உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
News January 26, 2026
நீலகிரி: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

நீலகிரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நீலகிரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம், 0423-2449250 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News January 26, 2026
நீலகிரி: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

நீலகிரி மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)


