News July 26, 2024

ஊட்டி படகு இல்லத்தில் விசை படகுகளுக்கு மட்டும் அனுமதி

image

ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றும் மழை பெய்ததால் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் அவர்களாகவே சவாரி செய்யும் துடுப்பு படகு மற்றும் மிதி படகு சவாரிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விசைப்படகுகள் மட்டும் வழக்கம்போல் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Similar News

News August 15, 2025

நீலகிரி: இலவச வீடியோ தொழில்நுட்பம் இலவச பயிற்சி!

image

நீலகிரி மாவட்டத்தில் பூர்வகுடிகளான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தமிழக அரசின் மூலம் இலவச வீடியோ தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பயிற்சியானது, தாட்கோ மூலம் வழங்க இருப்பதால் இந்த இலவச பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் 18 முதல் 30 வயது உள்ளவர்கள் www.thadco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். என மக்கள் தொடர்பு மற்றும் செய்தி துறையின் சார்பாக அறிவித்துள்ளனர்.

News August 15, 2025

உதகையில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி வைத்தார்

image

நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் கலைக்கல்லூரி மைதானத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளை கௌரவிக்கும் விதமாக பதக்கங்கள், மற்றும் சான்றிதழ்களை, வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டனர்.

News August 15, 2025

காந்தி சிலைக்கு மாலை அணிவித்த ஆட்சியர்

image

நீலகிரி மாவட்டத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள, காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., இன்று மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் உதகை வருவாய் கோட்டாட்சியர் சதிஷ், உதகை நகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.

error: Content is protected !!