News February 18, 2025

ஊட்டியில் மக்கள் குறை தீர்ப்பு நாளில் குவிந்த 210 மனுக்கள்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் நேற்று பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 210 மனுக்கள் பெறப்பட்டன. வீட்டுமனை பட்டா, விதவை, கல்வி உதவித்தொகை, வங்கி கடன் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News August 21, 2025

BREAKING: நீலகிரி இளைஞர் தவெக மாநாட்டில் பலி!

image

மதுரையில் இன்று நடைபெற்ற தவெக மாநாட்டில் கலந்துகொண்ட நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த ரோஷன் என்ற இளைஞர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். அதிக வெயில், கூட்ட நெரிசலால் மயக்கமடைந்த ரோஷனுக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News August 21, 2025

நீலகிரி: உள்ளூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரியில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Development manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 21, 2025

நீலகிரியில் இலவச Tally பயிற்சி!

image

நீலகிரியில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GSTபயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!