News August 15, 2025

ஊஞ்சல் சேவையில் ஆண்டாள், ரெங்கமன்னார்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடி மாத கடைசி
வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவையில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Similar News

News March 4, 2026

கே.டி.ஆர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் ஶ்ரீவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரி குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான வழக்கு விசாரணையை மார்ச்.13-ம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

News March 4, 2026

JUST IN விருதுநகர்: முன்னாள் திமுக எம்.பி விடுதலை

image

ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் ஆற்றில் சட்ட விரோதமாக மணல் திருடியதாக சேத்தூர் போலீஸார் டிராக்டர் ஓட்டுநர் முருகன், தென்காசி திமுக முன்னாள் எம்.பி தனுஷ்குமார் மீது வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு ஸ்ரீவியில் உள்ள ஜே.எம் 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் இருவரையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.

News March 3, 2026

விருதுநகர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

தபால் அலுவலகத்தில் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் பொன்மகன் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

error: Content is protected !!