News January 8, 2025

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் ஆட்சியர்

image

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்பட்டுவரும் காணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இயற்கை உணவகம் அமைப்பது குறித்து ஆட்சியர் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

Similar News

News January 28, 2026

வரலாற்று சின்னமான சூடாமணி விகாரம்

image

சூடாமணி விகாரம் என்பது நாகப்பட்டினத்தில் அமைந்திருந்த ஒரு பௌத்த விகாரமாகும். இது சோழர் காலத்தில் சுமார் கிபி 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது. மேலும் இது சைலேந்திர வம்சத்தின் ஸ்ரீவிஜய மன்னன் ஸ்ரீமாறவிஜயோத்துங்கவர்மனால் கட்டப்பட்டது என்று கருதப்படுகிறது. இது சோழர் காலத்தின் ஒரு முக்கிய நினைவுச் சின்னமாகவும் மக்களின் வாழ்வியலையும் எடுத்துரைக்கின்றது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 28, 2026

நாகை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நாகை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

நாகையில் குறைதீர் கூட்டம்!

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே.எஸ். பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், இன்று ஜன.28ம் தேதி வாராந்திர பொது மக்கள் குறைத்தீர் கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.கே. பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 8 மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!