News August 9, 2025
உழவர்சந்தைகளில் களைகட்டிய விற்பனை!

ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, எடப்பாடி, இளம்பிள்ளை, ஆத்தூர், ஜலகண்டாபுரம் உள்ளிட்ட 13 உழவர்சந்தைகளில், நேற்று ஒரே நாளில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமார் 303.80 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை சுமார் 72,200 நுகர்வோர்கள் வாங்கி சென்றனர். நேற்று மட்டும் ரூபாய் 1.25 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.
Similar News
News November 13, 2025
சேலம்: அரசு சோதனை அலுவலர் வேலை! APPLY NOW

சேலம் மக்களே மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 சோதனை அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். டிச.2ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<
News November 13, 2025
மேச்சேரி அருகே சோகம் காவலர் பலி!

சேலம், மேச்சேரி காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ ஆக பணியாற்றி வந்த தன்ராஜ். இரவு உணவு அருந்திவிட்டு சமையலறைக்கு கை கழுவச் சென்றபோது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயமடைந்துள்ளார். உறவினர்களால் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு மருத்துவர்களால் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
சேலம் வழியாக செல்லும் ரயிலில் கூடுதல் பெட்டிகள்!

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை-கேஎஸ்ஆர் பெங்களூரு-கோவை உதய் எக்ஸ்பிரஸ் டபுள் டக்கர் ரயிலில் [22666/22665] கூடுதலாக ஒரு ஏசி LHB பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி 20- ஆம் தேதி முதல் மே 19- ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், கோடை விடுமுறை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


