News February 25, 2026
உழவர்கரை பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு

புதுவை விமான நிலைய மைதானத்தில் பாஜக சார்பில் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார். இது தொடர்பாக ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுவைக்கு மார்ச் 1-ம் தேதி பிரதமர் வருகையையொட்டி, உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டிரோன்கள், பலூன்கள் போன்றவை பறக்கத் தடை விதிக்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.
Similar News
News April 8, 2026
புதுவை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

புதுவை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News April 8, 2026
புதுச்சேரியில் ரூ.6.71 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ.69 லட்சம் பணம், ரூ.61.37 லட்சம் மதிப்புள்ள மதுபானம், ரூ.6.71 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
News April 8, 2026
புதுச்சேரி: ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி, நாளை (ஏப்ரல் 9) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு (OPD) நாளை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வராமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


