News January 23, 2026
உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து!

உளுந்தூர்பேட்டை அருகே பில்லூர் குறுக்கு சாலையில், திருச்சி நோக்கிச் சென்ற வேனும் பெங்களூரைச் சேர்ந்த வரதராஜ் (75) வந்த காரும் நேருக்கு நேர் மோதி நேற்று விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் திருச்சியைச் சேர்ந்த ஜிராஜுதீன் (43) மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த எறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News February 16, 2026
கள்ளக்குறிச்சியில் ஹோட்டல் தொடங்க ரூ.50,000!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.
News February 16, 2026
கள்ளக்குறிச்சி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News February 16, 2026
கள்ளக்குறிச்சியில் நாளை மின் தடை!

தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நாளை(பிப்.17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூர், கோட்டை, தியாகை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, லாலாப்பேட்டை, சேர்ந்தாங்கல், பழைய சிறுவாங்கூர், சூளாங்குறிச்சி, மாடூர், பிரிதிவிமங்கலம், மடம், வீரசோழபுரம், பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மதியம் 2:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


