News February 24, 2026
உளுந்தூர்பேட்டையில் அதிபயங்கர விபத்து!

உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பயங்கர விபத்து ஏற்பட்டது. மடப்பட்டு மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த நெல் அறுவை இயந்திரத்தின் மீது, பின்னால் வந்த ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த மோதலின் தாக்கத்தால் நெல் அறுவை இயந்திரம் சாலையின் நடுவே கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 26, 2026
கள்ளக்குறிச்சி:Google Pay/ PhonePe/ Paytm-ல் பணம் அனுப்புறீங்களா?

கள்ளக்குறிச்சி மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News February 26, 2026
கள்ளக்குறிச்சி: Whatsapp பண்ணுங்க.. உடனே தீர்வு!

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News February 26, 2026
கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கான ஏலம் ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கான பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி இன்று(பிப்.26) நடைபெற இருந்த நிலையில் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலைய கடைகளுக்கான மறு ஏல தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


