News January 6, 2026
உலகில் அதிகம் திருடப்படும் பொருள் எது தெரியுமா?

திருட்டு என்றாலே பலருக்கும் பணம், நகை என்றுதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் உண்மையில் அதிகம் திருடப்பட்ட பொருள் என்ன என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், உலகில் அதிகம் திருடப்படும் பொருள் என்றால் பாலாடைக்கட்டி என்ற சீஸ் தான் என ஆய்வுகள் கூறுகின்றன. அதிக விலை, அதிக சுவை மற்றும் எளிதில் மறைக்க கூடியது என்பதால் உலகம் முழுவதும் அவை எளிதில் திருடப்படும் பொருளாக உள்ளது.
Similar News
News January 28, 2026
TET தேர்வின் தேர்ச்சி மதிப்பெண் 5% குறைப்பு

தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு நடத்தப்படும் TET தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 5% குறைக்கப்பட்டு 50% ஆகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு 15% குறைக்கப்பட்டு 40% ஆகவும் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கு 60% தொடரும். SHARE IT.
News January 28, 2026
விசிகவுக்கு Yes ராமதாஸுக்கு NO.. ஸ்டாலின் போடும் கணக்கு

DMK கூட்டணியில் ராமதாஸ் தரப்பு இணையலாம் என பேசப்பட்ட நிலையில், கூட்டணிக்கு பாமக தேவையில்லை என CM ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக DMK கூட்டணியில் VCK அங்கம் வகிப்பதாலும், கொள்கை ரீதியாகவும் ஒத்துப்போவதாலும் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்தும் எந்தக் கட்சியும் வேண்டாம் என கூறிவிட்டாராம். எனவே, தான் கடந்த 2 நாள்களாக DMK அரசை கடுமையாக சாடி ராமதாஸ் அறிக்கை வெளியிடுகிறாராம்.
News January 28, 2026
‘சாகப் போகிறேன்’.. டீச்சரின் விபரீத முடிவு

‘அம்மா, நான் தோற்றுவிட்டேன். எனது சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. எனது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லாமல் இங்கேயே தகனம் செய்யுங்கள்’. பிஹாரில் அரசு பள்ளி டீச்சர் பிரியா(30) கடைசியாக எழுதிய வரிகள் இவை. நீண்டகால உடல்நல பிரச்னையால் சிகிச்சை பெற்றுவந்த அவர், மன உளைச்சலில் சோக முடிவை எடுத்துள்ளார். தனது 3 மாத குழந்தையை தவிக்கவிட்டு பிரியா தற்கொலை செய்திருப்பது பெரும் துயரம். தற்கொலை எதற்கும் தீர்வல்ல!


