News August 14, 2024

உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை

image

நெல்லிக்குப்பம் பள்ளமேட்டு தெருவை சேர்ந்த ஜோதி என்பவர் உடல் நலக் குறைவால் காலமானார். இந்நிலையில் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலோடு உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த ஜோதியின் உடலுக்கு கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.

Similar News

News August 11, 2025

கடலூர்: டிகிரி போதும்! அரசு வேலை!

image

TNPSC குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து பயனடைய செயுங்கள்!

News August 11, 2025

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

image

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (ஆக.11) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமையில், போதைப் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், காவல் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு “போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்’’ என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

News August 11, 2025

மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.பி

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களிடம் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்று பேசுகையில், போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டும், சமூகத்தின் மீது அக்கறை கொண்டு போதை பொருட்களுக்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

error: Content is protected !!